பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்காக, அரசுப் பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது.

சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசுப் பேருந்துகளில், 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு தொடங்குகிறது. இதனிடையே ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகைக்கான அரசுப் பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறது.

image

தற்போது கொரோனா காரணமாக, 800 அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு கூடுதலான பயணிகள் செல்வர் என்பதால், தேவைக்கேற்க கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை திட்டமிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.