பேருந்துகளில் நூறு சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசானது தளர்வுகளை அறிவித்து வந்தது. அதன் படி 60 சதவீத பயணிகளுடன் போக்குவரத்து சேவையை இயக்கிக் கொள்ள அனுமதியளித்த அரசு, தற்போது 100 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதியளித்துள்ளது.
இது மட்டுமன்றி கூடுதலாக பேருந்து சேவையை இயக்கவும் அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி கல்லூரி பேருந்துகளில் நூறு சதவீத இருக்கைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தெரியவந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM