பீகாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை விட 31 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஏற்கனவே அக்கட்சியின் தலைமை அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தான் முதலமைச்சர் பதவியை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், பாட்னாவில் இன்று கூடும் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில், நிதிஷ்குமார் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்.
மேலும் அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவது? பதவியேற்பு விழாவை எப்போது நடத்துவது? என்பன உள்ளிட்ட விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படவுள்ளது. பீகாரில் மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பாஜக 74 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றது.