திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தள்ளிவிட்ட பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 திருத்தணியில் நேற்று முன் தினம் பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தபோது, மின்சார வசதி இல்லை எனக் கூறி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தனை பாஜகவை சேர்ந்த நபர் தள்ளிவிட்டார்.

image

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணை தலைவர் ஓம்சக்தி செல்வமணியை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.