தேஜஸ்வி யாதவ் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பீகார் முதல்வராக பதவியேற்றால் ஆச்சரியப்பட மாட்டேன் என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையான சவாலை உருவாக்கி வருகிறது என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மேலும் “ இப்போது பீகார் தேர்தலில் யாருடைய ஆதரவும் இல்லாத ஒரு இளைஞர் தேஜஸ்வி, அவரது குடும்ப உறுப்பினர்கள் சிறையில் இருக்கிறார்கள், சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்ற ஏஜென்சிகள் அவருக்கு எதிராக இருக்கிறது. ஆனால் இவை தேசியஜனநாயகக் கூட்டணிக்குத்தான் சவாலை உருவாக்கி வருவதை நாம் காண்கிறோம். தேஜஸ்வி யாதவ் நாளை பீகாரின் முதல்வராக இருந்தால், நான் ஆச்சரியப்பட மாட்டேன், ஏனென்றால் இவை பொது உணர்வுகள் “என்று கூறியுள்ளார்
பீகார் தேர்தலில் பாஜகவின் கோவிட் -19 தடுப்பூசி வாக்குறுதி சட்டவிரோதம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு “ தேர்தல் ஆணையம் இப்போது பாஜகவின் ஒரு கிளை அமைப்பு, இதிலிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது , ஆனால் இது ஒரு தெளிவான மீறல் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.