விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4-ன் இரண்டாவது எவிக்‌ஷனில் பாடகர் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார்.

கடந்த வார எவிக்ஷனில் குறைந்த வாக்குகள் வாங்கியபோதும் தன் கையிலிருந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் மூலம் தப்பித்தார் பாடகர் ஆஜித். எனவே கடந்த வாரம் எவரும் ஷோவிலிருந்து வெளியேறவில்லை.

இந்நிலையில் ஷோ தொடங்கிய நான்காவது வாரத்துக்கான எவிக்‌ஷன் நடைமுறை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

Also Read: ஆரி ஆன் ஃபயர்… எக்ஸ்போஸ் ஆகும் பாலா… அதட்டும் அர்ச்சனா! பிக்பாஸ் – நாள் 26 #Aari

இதில் சம்யுக்தா, கேபி, ஆரி, அர்ச்சனா, ஷிவானி ஆகிய ஐந்து பேரைத் தவிர மற்ற அனைவருமே நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றார்கள். அதாவது மொத்தம் 11 பேர்.

இந்த 11 பேரில் பாடகர் வேல்முருகனே குறைவான வாக்குகள் பெற்றதால், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

பிக்பாஸ் | வேல்முருகன்

வேல்முருகன் கமல்ஹாசனைச் சந்தித்து வெளியேறிய எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இன்று நள்ளிரவுக்கு மேல் வேல்முருகன் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது.

வேல்முருகன் வெளியேறிய தகவல் வெளியில் கசியத் தொடங்கியதிலிருந்து சமூக ஊடகங்களில் பலவிதமான மீம்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன.

நாளை (நவம்பர் 1) ஒளிபரப்பாகும் எபிசோடில் வேல்முருகனின் வெளியேற்றத்தைக் காணலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.