பரபரப்பும் பஞ்சாயத்துமாகப் பிக்பாஸ் சீசன் 4, ரேட்டிங்கில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
16 போட்டியாளர்களுடன் ஷோ தொடங்கிய அடுத்த சில தினங்களிலேயே 17-வது போட்டியாளராக ஆங்கர் அர்ச்சனாவும் உள்ளே நுழைந்தார்.
முதல் வாரம் மட்டும் எவிக்ஷன் இல்லை. அடுத்த வாரம் முதல் எவிக்ஷன் நடந்தது. நடிகை ரேகா வெளியேறினார்.
இதற்கிடையில் இன்னொரு போட்டியாளராக பாடகி சுசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தற்போது க்வாரன்டீனில் இருந்து வருகிறார். அநேகமாக வரும் வாரம் புதன் அல்லது வியாழன் அதாவது அக்டோபர் 28 அல்லது 29ம் தேதி பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் செல்லலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: இனி அனல் பறக்கும்… பிக்பாஸ் வீட்டுக்குள் விரைவில் சுசித்ரா?!
அதேபோல் இந்த வாரம் எவிக்ஷனில் வெளியேற ஆஜித், அனிதா சம்பத், பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆரி ஆகிய ஐந்து பேர் நாமினேஷனில் இருந்தார்கள். இந்த ஐவரில் குறைந்த வாக்குகள் பெறுபவர்கள் வெளியேற வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி, ஆரி ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று நிகழ்ச்சியில் தொடர்வது உறுதியாகியுள்ளது. மேலும் ஐந்து பேரில் ஆஜித்துக்கே மிகவும் குறைவான வாக்குகள் கிடைக்க, அவர் தன் கையிலிருக்கும் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் மூலம் வெளியேறுவதிலிருந்து தப்பித்து நிகழ்ச்சியில் தொடர்கிறார் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆக மொத்தத்தில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷன் இல்லை.