தன்னை சிறையிலடைக்க மகாராஷ்டிரா அரசு முயற்சி செய்து வருவதாக நடிகை கங்கனா குற்றஞ்சாட்டி உள்ளார்.
பாலிவுட் நடிகை நடிகை கங்கனா ரனாவத், இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கங்கனா மீது கடந்த வாரம் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் கங்கனா ரணாவத் மீது நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தாக்கலாகி உள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான விசாரணையில் காவல்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும், நீதித்துறையை கேலி செய்ததாகவும் நடிகை கங்கனா ரனாவத் மீது நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கலாகி உள்ளது.
இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், ‘’நான் சாவர்க்கர், சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சிராணி ஆகியோரை வழிபடுகிறேன். அரசு என்னை சிறையில் அடைக்க முயற்சி செய்கிறது.
இந்த முயற்சிகள் நான் வழங்கும் தலைவர்கள் மீது எனக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட வகை செய்கிறது. விரைவில் சிறைக்குப் போக நான் தயாராகி வருகிறேன். சிறையில் நான் வணங்கும் தலைவர்கள் அனுபவித்த துயரங்கள் என் வாழ்க்கை புதிய அர்த்தத்தை வழங்கட்டும். ஜெய்ஹிந்த்’’ என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், மகாராஷ்டிராவில் ‘உண்மையான பாசிச அரசாங்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தின் விளைவை சந்தித்து வருகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.