உத்தரபிரதேசம் போல சிறுமியின் பாலியல் வன்கொடுமைக்கு நீதி மறுக்கப்பட்டால் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராட்டம் செய்வேன் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “உ.பி.யைப் போல, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசாங்கங்கள் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மறுக்கவில்லை, அவரது குடும்பத்தினரை அச்சுறுத்தவில்லை மற்றும் நீதிக்கான பாதையைத் தடுக்கவில்லை. ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்தால், நீதிக்காக போராட நான் அங்கும் செல்வேன்” என்று கூறியுள்ளார்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “ காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடப்பதே இல்லையா, அங்கெல்லாம் ராகுல்காந்தி ஏன் செல்வதில்லை” என்று கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதில்சொல்லும் விதமாக ராகுல்காந்தி இந்த டிவீட்டை பதிவிட்டுள்ளார்