சென்னைக்கு அருகே ஹூண்டாய் நிறுவனம் ரூ.150 கோடி செலவில் தொழில்நுட்ப பயிற்சிப் பள்ளியைத் தொடங்கவிருக்கிறது.

சென்னைக்கு அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை என்ற இடத்தில் இளைஞர்களின் மார்கெட்டிங் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்த 6.45 ஏக்கர் நிலப்பரப்பில் அகாடமி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இன்று தலைமை செயலகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த அகாடமி குறித்து இந்திய ஹூண்டாய் மோட்டார் நிறுவன இயக்குநர் எஸ்.எஸ்.கிம், ‘’புதிய பயிற்சி மையத்தில், நன்கு தேறிய திறமைமிக்க தொழிலாளர்களை உருவாக்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது ஹூண்டாய் அகாடமி வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு புதிய கட்டத்திற்குச் செல்கிறது. மேலும் பயனாளிகளுக்கு அனைத்து வகையான தனிப்பட்ட மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். வளர்ந்து வரும் தொழில்வல்லுநர்களுக்கு அவர்களின் திட்டங்களை வெளிக்கொண்டுவர ஒரு வழியை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

image

மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம் வளர்ந்துவரும் நிறுவனங்கள் இருக்கிறது. இந்த அதிநவீன பயிற்சிமையம் எதிர்காலத்தின் இளைஞர்களை மேம்படுத்த மற்றொரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் எனவும், தமிழ்நாட்டையும், இந்தியாவையும் வாகன தொழில்துறையில் உலகளவில் முன்னணிக்குக் கொண்டு செல்லும் எனவும் கிம் கூறியுள்ளார்.

மூளைக்கு அருகில் சொருகிய மரக்குச்சிகள்..  அகற்றிய விழுப்புரம் அரசு மருத்துவர்கள் சாதனை 

இது திறமையானவர்களை உருவாக்கும் இடமாகவும், மனிதர்களின் படைப்பு மற்றும் தீர்வுகளை ஊக்குவிக்கும் இடமாகவும் அமையும். புதிய உள்கட்டமைப்பு பயிற்சி திட்டங்களை அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு செல்லும் அதேவேளையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் திறமையான மனிதவளத்தை உலகளாவிய மையமாக மாற்றும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.