பெரம்பலூரில் டைனோசரின் முட்டை கிடைத்தது என்ற வதந்தி பரவியது. இதனை கிண்டல் செய்து இப்போது இணையம் முழுவதும் பல்வேறு மீம்ஸ்கள் வலம்வந்துகொண்டிருக்கின்றன.
பெரம்பலூரின் அருகிலுள்ள குன்னம் கிராமம், ஆணைவாரி ஓடை செல்லும் வழியில் இருக்கும் வெங்கட்டான் குளத்தில் சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதி மக்கள் வண்டல் மண் எடுத்தபோது கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றின் தொலியல் படிவங்கள் கிடைத்தன.
அப்போது பல உருண்டைவடிவ தொல்லியல் பொருட்களும் கிடைத்தது, இது டைனோசரின் முட்டை என்று பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவியது.
ஆனால் இது டைனோசர் முட்டை இல்லை. பொதுவாக ஒரு சிறுபொருள் இருந்தால் அதனைச்சுற்றி தாதுப்பொருட்கள் சேர்ந்து உருண்டையாக அல்லது முட்டைவடிவில் காட்சியளிக்கும் இதுதான் இந்த பொருள் என தொல்லியல் அறிஞர்கள் விளக்கம் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து இப்போது பல வித்தியாசமான கலக்கல் மீம்ஸ்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த மீம்ஸ்களில் பெரம்பலூர் மற்றும் அரியலூரில் டைனோசர் வாழ்வதுபோன்ற நகைச்சுவை நிறைந்த பல மீம்ஸ்களும் பரவி வருகின்றன.