ஆண்டிபட்டி அருகே தீராத வயிற்றுவலியால் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மனைவி செண்பகவள்ளி(வயது  29). இவருக்கு சுரேனா(வயது 10) மற்றும் சுரேஸ்ரீ(வயது 7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செண்பகவல்லி கடந்த 2 வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்துள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் செண்பகவள்ளி மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து செண்பகவள்ளிக்கு அதிகப்படியான வயிற்றுவலி ஏற்பட்டதால் தற்கொலை செய்ய கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

image

மேலும் தான் இறந்து விட்டால் தன் மகள்களை யார் காப்பாற்றுவது என்று விஷ விதைகளை  தன் இரண்டு மகள்களுக்கு கொடுத்ததோடு தானும் சாப்பிட்டுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செண்பகவள்ளி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் சிகிச்சையில் இருந்த இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.