இனி சார்ஜர் கிடையாது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பை கலாய்த்துள்ளது சாம்சங்.
 
உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது புதிய ஸ்மார்ட் போன்களான ஐபோன் 12 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. அப்போது நிறுவனம் தனது மொபைல்களுடன் சார்ஜர் அடாப்டர் அல்லது இயர்போன்களை இனிமேல் வழங்காது என்ற புதிய கொள்கையையும் அறிவித்தது. அதாவது MagSafe எனப்படும் காந்தங்களால் ஐபோனின் பின்புறம் ஒட்டி தான் செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும்.
 
சாம்சங் உட்பட மற்ற சில பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஆப்பிளின் இந்த முடிவை கேலி செய்து வருகின்றன. 
 
ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, சாம்சங் கரீபியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு சாம்சங் பவர் அடாப்டரின் படத்தை வெளியிட்டு, “உங்கள் கேலக்ஸி போன்களுடன் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் சாம்சங் தருகிறது. மிகவும் அடிப்படையான சார்ஜர் முதல் 120 ஹெர்ட்ஸ் திரை வரை அனைத்தையும் தருவதாக ஆப்பிளை நிறுவனத்தை மறைமுகமாக கலாய்க்கும் விதமாக பதிவிட்டிருந்தது.

image
 
சாம்சங் மட்டுமல்லாது கடந்த புதன்கிழமை சியோமி நிறுவனமும் இதேபோன்று ஆப்பிளைக் கலாய்த்தது. ஒரு ட்விட்டர் பதிவில், நிறுவனம் “Mi 10T புரோவுடன் எதையும் வழங்குவதை நிறுத்தவில்லை” என்று பதிவிட்டுள்ளது.
 
புதன்கிழமை தனது ஒன்பிளஸ் 8T ஃபிளாக்ஷிப்பை அறிமுகப்படுத்திய ஒன்பிளஸ், புதிய தொலைபேசியுடன் 65 சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி ஆப்பிள் நிறுவனத்தைக் குத்திக்காட்டியுள்ளது.
 
முன்னதாக சுற்றுச்சூழல் காரணங்களுக்காக சார்ஜர் உள்ளிட்ட உபகரணங்கள் அகற்றப்பட்டதாக சாம்சங் நிறுவனம் விளக்கம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.