2020-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ரோஜர் பென்ரோஸ், ரிய்ன்ஹார்ட் கொன்செல், ஆண்ட்கியா கெஸ் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. கருந்துளை பற்றிய ஆய்வுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.