திருமணத்திற்காக செய்யும் மதமாற்றம்… அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பும், சில கேள்விகளும்!
இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த பெண் ஒருவர், இந்து மதத்திற்கு மதம் மாறி திருமணம் செய்திருக்கிறார். அதன் பிறகு, சில அச்சுறுத்தல்களின் காரணமாக, அந்த காதல் தம்பதியினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு வேண்டி மனு ஒன்றினை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் மகேஷ் சந்திர திரிபாதி, திருமணத்திற்காகச் செய்யப்படும் மதமாற்றம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் சில வழக்குகளுக்கு தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த வழக்கில் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு பெண்…