சிக்கலில் தவிக்கும் லக்ஷ்மி விலாஸ் வங்கி… முதலீட்டாளர்களின் பணம் பத்திரமா?
நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால், சமீபகாலமாக இந்திய வங்கிகள் தொடர்ந்து சிக்கலில் தவித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு யெஸ் வங்கி. தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கி. செப்டம்பர் 25-ம் தேதி வங்கியின் இயக்குநர் குழுவை மறுநியமனம் செய்வதற்கு பங்குதாரர்கள் அனுமதி வழங்கவில்லை (10 இயக்குநர்களில் ஏழு நபர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் கடந்த ஜனவரியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைமைச் செயல் அதிகாரிக்கும் வாய்ப்பில்லை!). 60% பங்குதாரர்கள் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக…