2017 முதல் 2018ஆம் ஆண்டு வரை பல வங்கிகளில் ரூ .1 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக லக்னோவின் பெருநகர கோட்வாலியில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக உதவி மேலாளர் ரஞ்சனா மராவி கூறுகையில் “அக்டோபர் 2017 முதல் மார்ச் 2018 வரை 15,436 போலி நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இது தொடர்பான விசாரணையின் போது, 9,753 போலி 500 ரூபாய் நோட்டுகளும், 5,783 போலி 1000 ரூபாய் நோட்டுகளும் கண்டறியப்பட்டது. மீட்கப்பட்ட மொத்த போலி நோட்டுகளின் மதிப்பு 1.55 கோடி ரூபாய் அளவில் உள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட நோட்டுகளை தடயவியல் பரிசோதனை செய்யுமாறு ரஞ்சனா மராவி பெருநகர போலீசாரிடம் கேட்டுள்ளார். ரஞ்சனா மராவியின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் இன்ஸ்பெக்டர் யஷ்காந்த் சிங் தெரிவித்துள்ளார்.