சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கடும் விவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்றும், சில மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் வேட்பாளரை இன்றே முடிவெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வழிகாட்டுக் குழு அமைப்பதற்குப் பதிலாக கட்சியை நிர்வகிக்கக் குழு ஒன்றை அமைக்கலாம் எனவும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. செயற்குழுக் கூட்டம் தொடங்கிய உடனே 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் சுமார் 5 மனிநேரம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.