தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் ‘தமிழ்நாடு வோளண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பத்து (10) இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு 2020-21-ம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 45,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன.

வேளாண் பல்கலைக்கழகம்

கோவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் பாதிப்பு அதிகமுள்ள காரணத்தினால், இணையதளம் மூலமாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தேதி நீட்டிப்பு குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை வெளியீடு

10 இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க வசதியாக இணையதளம் மூலமாக விண்ணப்பத்தைப் பதிவேற்றுவதற்கான கடைசி தேதி 05.10.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.