நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டும்தான் என்று அஜித் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அஜித்தின் பெயரைச் சொல்லி பலர் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள் என கடந்த ஆண்டு செய்திகள் வெளியானது. அஜித்தின் மேலாளர் என்று சொல்லிக்கொண்டு பலர் தவறான வழிகளில் செல்கிறார்கள் என்ற புகார்களும் எழுந்தன. இதனால், தனது பெயரை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக நடிகர் அஜித்குமார் தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில்,

image

    “சமீபகாலமாக ஒரு சில தனி நபர்கள் பொதுவெளியில் என் கட்சிக்காரர் சார்பாகவோ அல்லது அவரது பிரதிநிதி போலவோ எனது கட்சிக்காரரின் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்திற்கு வந்து உள்ளது. இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாகப் பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும் அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

image

மேலும் தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நிறுவனமோ தனி நபரோ அணுகினால் அந்தத் தகவலை உடனடியாக சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்கவேண்டும் என்று  வேண்டுகோள் விடுக்கிறார். இதை மீறி யாராவது இத்தகைய நபர்களிடம் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடம் தொடர்பில் இருந்தால் அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல. பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.