தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமியை பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா பாராட்டியுள்ளார்.

 

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக ஆண்கள் மட்டுமே இரு வந்த நிலையில் பெண்களாலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்களை விரைவாக இயக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரலட்சுமி. கடந்த மூன்று வருடமாக சென்னையில் கணவருக்கு  உதவியாக கார் டிரைவராக பணிபுரிந்து வந்த வீரலட்சுமி கொரோனா ஊரடங்கில் சொந்த ஊரானா தேனிக்கு சென்றிருக்கிறார்.

image

அங்கு அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் அழைக்கும் நோயாளிகளை எப்படி கையாள்வது என்ற பயிற்சியையும்  முடித்திருக்கிறார். அதனால், இவருக்கு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பணி கடந்தவாரம் கிடைத்துள்ளது.

image

இந்நிலையில், வாரம்தோறும் தன்னை ஈர்த்த மக்களை ஊக்குவிக்கும் விதமாக  நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமெரிக்காவில் வசித்தாலும் இந்திய தன்னம்பிக்கை மனிதர்கள் குறித்து பகிர்ந்து வருகிறார். அவர், தற்போது என்னை இந்தவாரம் ஈர்த்த விஷயங்கள் என்று வீரலட்சுமியை குறித்து பதிவிட்டு பாராட்டியுள்ளார்

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.