ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ அடுத்தடுத்து சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அடுத்தடுத்து சந்தித்துள்ளார். அதிமுகவில் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்று முடிவு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புகளுக்கு இடையே பிரச்னை எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த வித பிரச்னையும் அதிமுகவில் இல்லை என அமைச்சர்களும், நிர்வாகிகளும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்களும், எடப்பாடி…