கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
கொரோனா பரவல் காரணமாக விம்பிள்டன் உள்ளிட்ட பல டென்னிஸ் தொடர்கள் ரத்தான நிலையில், கிரான்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது. ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீறினால், தொடரிலிருந்தே வெளியேற்றப்படுவர் என வீரர்-வீராங்கனைகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடரில் கொரோனாவிலிருந்த மீண்ட நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் பங்கேற்றுள்ளார். காயத்தால் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், கொரோனா அச்சத்தால் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் போட்டியில் பங்கேற்கவில்லை.
மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் பியான்காவுடன், நட்சத்திர வீராங்கனைகள் செரினா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.