நடிகர் சோனு சூட் சமூக வலைதளங்கள் மூலம் இதுவரை தனக்கு 32 ஆயிரம் பேர் உதவி கேட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு சூழலால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் சோனுசூட் உதவிக்கரம் நீட்டினார். மேலும், சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கும் உதவி வந்தார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மக்களையும் மாணவர்களையும் இந்தியா அழைத்துவர விமான செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். கேரளாவில் சிக்கித்தவித்த பீஹார் மாநில ஆயத்த ஆடைத் தொழிலாளர்களை விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு விமானம் ஏற்பாடு செய்தார். விவசாயிக்கு டிராக்டர், ஏழைக்குழந்தைகளைத் தத்தெடுத்தது உள்ளிட்ட உதவிகளை செய்து வந்ததால் சமூக வலைதளங்களில் அவருக்கு உதவிக்கான கோரிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில்தான், அவர் இதுவரை 32 ஆயிரம் பேர் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் என்னால், முடிந்தவரை உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது, ஒரு பழங்குடியினப் பெண்ணுக்கு வீடும், கர்நாடகாவில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு காய்கறிக் கடையும் வைக்க உதவியிருக்கிறார்.