கொரோனா எதிரொலியால் வருவாய் இழந்த ஒட்டுநர் ஒருவர் தன்னுடைய ஆட்டோவை கடையாக மாற்றி வடை வியாபாரம் செய்து வருகிறார்.

மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலகிருஷ்ணன். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் கோச்சடை பகுதியில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்தார். இவரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா பொதுமுடக்கம்.

image

4 மாதங்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்களில் பயணம் மேள்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் முறையான வருமானமின்றி ஆட்டோ ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலசுப்பிரமணியன் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திவிட்டு, ஆட்டோவை கடையாக மாற்றி வடை வியாபாரத்தைத் தொடங்கியுள்ளார். ஆட்டோவில் அடுப்பு, வடை சுடும் பாத்திரம், வடைகளை வைக்க கண்ணாடிப்பெட்டி என மாற்றி அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

image

இதுகுறித்து அவர் கூறுகையில், “15 வருடங்களாக ஆட்டோ ஓட்டினாலும் எனக்கு ஓட்டல் தொழிலும் தெரியும். கொரோனா காலகட்டத்தில் ஓட்டல் ஒன்றை வைத்த நிலையிலும், பொதுமக்கள் வெளியில் சாப்பிட அஞ்சுகின்றனர். இதனால் ஓட்டலையும் மூடிவிட்டேன். எனவே எனது ஆட்டோவையே கடையாக்கி தற்போது அதன் மூலம் 500 ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறேன். அரசு விரைவில் கொரோனா பிரச்சனையில் இருந்து மக்களை காக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.