ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற அவல சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பகுதியில் கொரோனாவால் 2 பேர் இறந்துள்ளனர். அவர்களின் சடலத்தை கொண்டு செல்ல அச்சமயம் ஆம்புலன்ஸ் இல்லை என்பதால், இருவரின் சடலங்களையும் அரசின் டிராக்டர் குப்பை வண்டியில் வைத்து கொண்டு சென்றிருக்கின்றனர். சடலங்களை குப்பை வண்டியில் கொண்டு செல்லும் அந்தக் காட்சிகளை யாரோ செல்போனில் படம்பிடித்துள்ளனர்.

image

தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதேபோன்று, விஜயநகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா நோயாளிகளை குப்பை வண்டிகளில் மருத்துவமனைக்கு ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. கொரோனாவால் இறந்த சடலங்களை குப்பை வண்டிகளில் ஏற்றி செல்லும் அவல நிலையை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கேமரா இல்லை;ஆனால் நினைவாற்றல் உண்டு -பைக் எண்ணை வைத்து வழிப்பறி செய்தவர்களை மடக்கிய போலீஸ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.