தலைநகர் டெல்லியில் 16 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  சம்பவம் தொடர்பாக, மூன்று நாள்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பு ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக டெல்லியில் 12 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இப்போது அந்தச் சிறுமி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுஒரு புறம் இருக்க வடமேற்கு டெல்லியின் நேதாஜி சுபாஷ் பகுதியில் 16 வயது சிறுமி மூன்று நாள்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்.

image

இதனையடுத்து அந்தச் சிறுமி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். போலீஸார் அந்தச் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்த நபர் சிறுமிக்கு கடந்த ஒரு மாதமாக அறிமுகமாகியுள்ளார். சமூக வலைத்தளம் மூலம் சிறுமியிடம் நட்பாகி பழகி வந்துள்ளார். மேலும் அந்த நபர் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. சிறுமியின் வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்து அந்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

image

இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பு 24 வயதுடைய இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். டெல்லியில் மட்டும் இந்தாண்டு ஜூன் மாதம் வரை 636 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.