இந்தியாவுக்காக விளையாட இப்போதும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்.காம் இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள அமித் மிஷ்ரா “நான் இப்போதும் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடுவதற்கு காரணமே நிச்சயம் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவேன் என்ற நம்பிக்கையின் காரணமாகதான். எப்போது வேண்டுமானாலும் எனக்கு அழைப்பு வரலாம் அப்போது நான் விளையாட தகுதி வாய்ந்தவனாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு” என்றார்.

image

மேலும் “நான் எப்போதும் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகியே இருப்பேன். பொதுவாக வாழ்க்கையில் சோர்ந்திருக்கும்போது ஒரு சிலர் மட்டுமே உங்களை ஊக்கப்படுத்துவார்கள். அதற்காக நாம் காத்திருக்காமல் நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடினமான உழைப்பை கொடுக்க பாடுபட வேண்டும்” என்றார் அமித் மிஷ்ரா.

image

தொடர்ந்து பேசிய அமித் மிஷ்ரா ” சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை. ஒரு வீரர் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறாரா இல்லையா என்பதை மட்டும் பார்க்க வேண்டும்” என கூறியுள்ளார். இந்திய அணிக்காக 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அமித் மிஷ்ரா 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்போது 37 வயதாகும் அமித் மிஷ்ரா கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.