தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது.

image

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 6,501 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,08,784 ஆக உயர்ந்துள்ளது.

image

சென்னையைப் பொருத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,207 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,349 பேர் உயிரிழந்துள்ளனர்.

“பாஜகவில் இணையவில்லை”: ஜே.பி.நட்டாவை சந்தித்தபின் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பேட்டி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.