ஆங்கிலேயர்களின் அரசியல் சாசனத்தை அப்புறப்படுத்தி இந்தியாவிற்கென்று தனி அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டது இதே நாளில்தான்(ஆகஸ்ட் 3). சட்ட அமைச்சராக இருக்கும்போது சாதி, மத, பாலினம், சமுத்துவம் சார்ந்த பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளார்.
உலக வரலாற்றில் ஒரு சட்ட அமைச்சர் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கும் ‘இந்து சட்ட மசோதா’வை கொண்டுவந்தபோது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கிளம்பியதால் தனது சட்ட அமைச்சர் பதவியையே ராஜிமானா செய்தவர் என்றால், அது அம்பேத்கராகத்தான் இருப்பார். மானுட விடுதலையைப் போற்றிய அவர் சிறந்த பெண்ணியவாதியும்கூட.