உலகின் மிகசிறந்த உறவைக் கொண்டாடும் நாளான இன்று அக்‌ஷய்குமார் தனது புதிய படமான ‘ரக்‌ஷா பந்தன்’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஹிமாண்டி ஷர்மா எழுதி, ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தை தனது சகோதரி அல்காவுக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகியோருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் ’அட்ரங்கி ராய்’ படத்தையும் எல் ராய்தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதுவரை தான் நடித்த படங்களிலேயே இந்த படம்தான் மிக விரைவாக முடிவெடுத்தது என அவர் கூறியுள்ளார். இந்த படம் பார்த்தவுடனே ஆழமாக இதயத்தைத் தொடும் கதையம்சம் கொண்டது. உலகின் மிக சிறந்த பந்தமான சகோதர சகோதரி பிணைப்புக்கும், என் சகோதரி அல்காவிற்கும் ’ரக்‌ஷா பந்தனை’ அர்ப்பணிக்கிறேன். இந்த சிறப்பான வாய்ப்பை கொடுத்த ஆனந்த எல் ராய்க்கு நன்றி என அக்‌ஷய் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

image

2017ஆம் ஆண்டு ராஜு என தான் அன்பாக அழைக்கும் அக்‌ஷய் பற்றி அவரது சகோதரி அல்கா கூறுகையில், தன் சகோதரர் தனக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசை வெளிப்படுத்தினார். நைட் பார்ட்டிகளுக்கு செல்லவேண்டுமானால் பெற்றோர் ராஜுவிடம் கேடக்வேண்டும் என சொல்வார்கள். ஆனால் அவர் ஒருபோதும் என்னுடன் வரமாட்டார். உன்னை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறிவிடுவார். இதனால் நிறைய பார்ட்டிகளை தவற விட்டிருக்கிறேன் என கூறியிருந்தார்.

தனது தந்தை இறந்தபோது குடும்பப் பொறுப்புகளை அக்‌ஷய் எவ்வாறு பொறுப்பாக ஏற்றுக்கொண்டார் என்பது பற்றியும் அல்கா பேசியிருந்தார்.
மேலும் அல்காவின் மகள் சிமர் உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அக்‌ஷய் கூறியதன் முக்கியத்துவத்தை தான் உணர்ந்துகொண்டதாக அவருக்கு நன்றி கூறியிருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.