தாசில்தார் ஒருவரை பசு மாடு ஒன்று அரை மணி நேரம் விடாமல் துரத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கான மாநிலம் வானபர்த்தி பகுதியில் உள்ள பிரஜ வைத்திய சாலையில் பசுமாடு ஒன்று காரில் சென்ற தாசில்தாரை கிட்டத்தட்ட அரைமணி நேரம் விடாமல் துரத்தியது. அவர் காரை நிறுத்தினால் பசுமாடு காரின் முன்பு வந்து நின்று காரை அங்கிருந்து செல்ல முடியாத வண்ணம் செய்தது. இது மட்டுமன்றி கார் கண்ணாடி அருகே வந்து நின்று கொண்டும் காரை இயக்கும் போதும் தொடர்ந்து துரத்திக்கொண்டும் வந்தது. 

 

 

இதுகுறித்து உள்ளூர் வாசிகள் கூறும் போது அப்பகுதியில் அப்பசு தங்கியிருந்த கொட்டகையை வேறு இடத்திற்கு தாசில்தார் மாற்றம் செய்தமையால் பசுவானது அவரை விடாமால் துரத்துகிறது என்றனர்.

ஆனால் இது குறித்து தாசில்தார் கூறும்போது “ பசுவானது பாசத்தில் துரத்துகிறது. இப்படி பல நபர்களை இம்மாடு துரத்தியிருக்கிறது. இது ஒரு விதமான பாசம். கொட்டகையானது வேறு இடத்திற்கு மாற்றப்பட வில்லை”என்று கூறியுள்ளார்.

பசு மாடு தாசில்தாரை துரத்திச் சென்ற வீடியோ எடுத்த நபர்கள் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.