ரூ.147-க்கு புதிய பிரிபெய்டு பிளான் ஒன்றை பிஎஸ்என்எல் நெட்வொர்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.147-க்கு புதிய பிரிபெய்டு பிளானும், ரூ.247 மற்றும் ரூ.1,999 ஆகிய பிளான்களின் வெலிடிட்டியை நீட்டித்தும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.147-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரிபெய்டு பிளானின்படி, 30 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் கால்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 250 நிமிடங்கள் எஸ்.டி.டீ அழைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஜிபி இண்டர்நெட் சேவையும் அளிக்கப்பட்டுள்ளது.

image

இதுதவிர ரூ.247-க்கு வழங்கப்பட்ட பிரிபெய்டு பிளானின் வெலிடிட்டி 36 நாட்களுக்கும், ரூ.1,999க்கான பிளான் வெலிடிட்டி 439 நாட்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.144, ரூ.792, ரூ.1,584க்கு இதுவரை வழங்கப்பட்ட பிரிபெய்டு பிளான்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், ரூ.551, ரூ.349, ரூ.447க்கு அளிக்கப்பட்ட பிரிபெய்டு பிளான்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

நாணயத்தை விழுங்கிய குழந்தை: மருத்துவமனைகளின் அலட்சியத்தால் மரணம் என புகார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.