கர்நாடகாவைச் சேர்ந்த 110 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசுதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

image

இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 36 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை வருத்தம் தரக்கூடியதாக இருந்தாலும், குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருப்பது ஆறுதலான செய்தி. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த 110வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்

image

கொரோனாவை வென்ற 110 வயது மூதாட்டி கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தின் புருஜனாகட்டி பகுதியைச் சேர்ந்தவர் சித்தம்மா. இவர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், சித்தம்மாவுக்கு வயது 110. அவருக்கு 5 பிள்ளைகள், 17 பேரப்பிள்ளைகள், 22 கொள்ளுபேரப்பிள்ளைகள் உள்ளனர். 110 வயதில் கொரோனாவை வென்று வீட்டிற்கு திரும்பியுள்ள சித்தம்மாவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.