கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந் தேதி முதல் நவம்பர் 8-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஐ.பி.எல் இறுதி போட்டி நவம்பர் பத்தாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் ஐபிஎல் நிர்வாக குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்றைய ஆலோசனையில் இறுதி போட்டிக்கான தேதி நவம்பர் 10-ஆம் தேதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் போட்டிகள் வழக்கமான 8 மணிக்கு தொடங்காமல், 7.30 மணி அளவில் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.