நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில், சுஷாந்தின் தந்தை விரும்பினால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பீகாரின் துணை முதல்வர் சுசில் மோடி, மகாராஷ்டிரா காவல்துறை சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது “ இந்த வழக்கு விசாரணையில் மகாராஷ்டிரா காவல்துறை பீகார் காவல்துறையுடன் ஒத்துழைக்கவேண்டும். ஏனென்றால் பீகாரிலுள்ள பாட்னா காவல்நிலையத்தில் தான் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இரு மாநில காவல்துறைக்கும் இடையே எந்த மோதலும், கருத்து வேறுபாடும் இல்லை. சுஷாந்தின் தந்தை விரும்பினால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஆனால் பீகாரின் பாஜக துணை முதல்வர் சுசில் மோடி “ மகாராஷ்டிராவின் சிவசேனா – காங்கிரஸ் அரசு, இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலை வழக்கில் பல தடைகளை உருவாக்குகிறது” என்று கூறிவருகிறார்.