இசையமைப்பாளர் இளையராஜா தரப்பிலிருந்து பிரசாத் ஸ்டூடியா மீது ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது.

பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இடம் ஒதுக்கப்பட்ட விவகாரம் ஏற்கெனவே பிரச்னையில் உள்ளது. இந்நிலையில் சென்னை பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

image

அந்தப் புகாரில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசை நோட்ஸ்களை சேதப்படுத்தியதாக சாய் பிரசாத் மீது குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன், “இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவை இளையராஜாவை நுழையவிடாத பிரச்சினை ஏற்கனவே தெரியும். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள் : மு.க.ஸ்டாலின்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.