ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது ஏன் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தர்மபுரி சின்னமானசாவடியில் உள்ள ஒரு ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருவதாகவும் இதை மீட்க வேண்டும் எனவும் கோரி கலையரசி என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களில் அதிகளவில் ஆக்கிரமிப்பு நடப்பதாக தினமும்  நாளிதழ்களில் செய்தி வருவதாக தெரிவித்த நீதிபதிகள்  ஆக்கிரமிப்புகளுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது ஏன் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
 
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவு பிறப்பித்தும் ஏன் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீர் ஆதாரங்களை பாதுகாக்க ஏன் தனி  அமைச்சகம் அமைக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியனர்.  

கரோனா: தமிழகத்துக்கு அதிகமான நிதி ...

 

 
மேலும், இயற்கை வளங்களை விலைக்கொடுத்து வளர்ச்சியை பெற கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தலைமை செயலாளர் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரை தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்த்தனர்.
 
பின்னர், தமிழகத்தில் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள   ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் மழை நீர் விணாக கடலில் கலப்பதை தடுப்பது குறித்தும் நான்கு வாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.