கந்த சஷ்டி கவச விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீதும் குண்டாஸ் பாய்ந்துள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார். பின்னர், சுரேந்திரன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சுரேந்திரனையும் செந்தில்வாசனையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய ...

ஆனால் செந்தில்வாசனை மட்டும் 4 நாட்கள் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. சுரேந்திரனை காவலில் எடுக்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில், கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீதும் குண்டாஸ் பாய்ந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.