தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று போனில் பேசிய நபர் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்பு தொலைப்பேசியல் வந்த மிரட்டல் புரளி என போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து நீலாங்கரை போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

image

மிரட்டல் விடுத்த அந்த நபர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் போலீசாருக்கு இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விழுப்புரம் போலீசார் மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் மிரட்டல் மிரட்டல் விடுத்த நபர் முக்கிய பிரமுகர்களின் வீட்டிற்கு அடிக்கடி தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்து கைதாகி சிறைக்கு சென்று வந்தவர் என்றும் தற்போது கூட சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்த பிறகு மிரட்டல் விடுத்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.