பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவர் மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாமானிய மக்களை தாண்டி காவல்துறையினர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனை அவர்களே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

கொரோனா குறித்து பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், எனக்கும், என் அப்பாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதி காக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நன்றி எனத் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், “எனக்கு கொரோனா பாசிடிவ். மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் எனது குடும்பம் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுக்காக காத்திருக்கிறோம். என்னுடன் கடந்த 10 நாட்களாக நெருக்கமாக இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அபிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் பதிவுக்கு பதிலளித்துள்ள பல்வேறு தரப்பினரும், ‘விரைவில் இருவரும் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.