கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஜூன் 2021ஆம் ஆண்டு வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் இணைந்து விளையாடும் ‘ஆசிய கோப்பை’ கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தப் போட்டி தள்ளிவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

image

ஆசிய கோப்பை தொடர்பாக ஆசிய கிரிக்கெட் ஆணையத்தின் சார்பில் செயற்குழு ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இறுதியில் ஆசிய கோப்பையை ஜூன் 2021 வரை தள்ளி வைப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆசிய கிரிக்கெட் ஆணையம், திட்டமிட்ட தேதியில் ஆசிய கோப்பையை தொடங்க நினைத்ததாக தெரிவித்துள்ளது. ஆனால் நாடுகள் கடந்து பயணிப்பதில் உள்ள கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்த வேண்டிய விதிமுறைகள், அடிப்படை சுகாதார பிரச்னைகள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட காரணங்களால் ஆசிய கோப்பை ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

image

மேற்கண்ட காரணங்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள், இதர பணியாளர்கள், வர்த்தக பங்குதாரர்கள், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகத்தினரின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கருதியும் தொடர் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 20201ஆம் ஆண்டு வரை தொடர் தள்ளி வைக்கப்படுவதாகவும், அதன்பின்னர் சரியான கால அட்டவணையை தேர்வு செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் விற்றவர்களை திருத்தி மறுவாழ்வு : ‘ரியல் ஹீரோ’ எஸ்.பி மயில்வாகனம்..!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.