திண்டுக்கல்லில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தங்கையின் இறப்பில் மர்மம்: சுடுகாட்டில் காத்திருக்கும் அண்ணன் : இருவர் மீது வழக்குப்பதிவு
நத்தம் அடுத்துள்ள வேம்பார்பட்டியைச் சேர்ந்த 45 வயது நபர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று 04.07.20 காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.