பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இறப்பை தாங்க முடியாமல், அந்தமான் நிக்கோபாரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.எஸ்.தோனி வாழ்க்கைப் படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 14 ஆம் தேதி மும்பையிலுள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை திரைத்துரையில் மிகப் பெரிய அதிர்வலையை உருவாக்கியது.

தோனி வரலாற்று படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்  தற்கொலை - Film Crazy

சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பிற்கு பிரதமர் உட்பட திரைபிரபலங்கள் ரசிகர்கள் தங்களது ஆழந்த இரங்கல்களை சமூக வலைதளங்கள் மூலமாக வெளிப்படுத்தினர். அவரது மீது அதீத அன்பு கொண்ட ரசிகர்கள் சுஷாந்த் சிங்கின் இறப்பு தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறிய வீடியோக்களும் வெளியாகின. அதனை தொடர்ந்து சுஷாந்த் சிங் ரசிகரான உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

Sushant Singh Rajput: Autopsy reports confirm suicide, last rites to be  held in Mumbai today || நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு உள்ளார்  ;விசாரணை வேண்டும் -உறவினர்கள் கோரிக்கை

அந்த வரிசையில் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவின் போர்ட் பிளேர் நகரில் வசித்து வந்த 15 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் டைரியில் சுஷாந்தி சிங்கின் தீவிர ரசிகை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டி.ஜி.பி தீபேந்திர பதக் கூறும் போது “சிறுமி கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இறப்பதற்கு முன்னதாக சிறுமி அவரது டைரியில் சுஷாந்த் சிங் குறித்து பலவற்றை எழுதியுள்ளார். அதை வைத்து பார்க்கும் போது அவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தீவிர ரசிகை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் தற்கொலை செய்தற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.