என்னுடைய மூச்சு இருக்கும் வரை நீயும் என்னுடன் வாழ்வாய் என மறைந்த கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் உருக்கமான கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

image

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக கடந்த வாரம் உயிரிழந்தார். அவருக்கு வயது 39. சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணம் கன்னட திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்த சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 19 படங்களில் நடித்துள்ளார். நடிகை மேக்னா ராஜை 2018 ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா திருமணம் செய்துக்கொண்டார். இப்போது மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில் மேக்னா ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறைந்த கணவர் சிரஞ்ஜீவி சர்ஜாவுக்கு உருக்கமான கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அதில் “உன்னைப்பற்றி நான் வார்த்தைகளில் சொல்ல நினைத்து தோற்றுப் போகிறேன். இந்த உலகத்தில் எந்த வார்த்தைகளாலும் உன்னைப் பற்றி சொல்ல முடியாது. கணவன் என்ற உறவைத்தாண்டி எனக்கு எல்லாமுமாக நீ இருந்து இருக்கிறாய். எப்போதெல்லாம் நான் சோர்வாகி துவண்டுப் போறேனா அப்போதெல்லாம் என்னை காக்கும் தேவதையாய் இருந்திருக்கிறாய்”.

image

 மேலும் அந்தத் கடிதத்தில் “நீ என்னை எவ்வளவு காதலிக்கிறாய் என்று எனக்கு தெரியும். அதனால்தான் நீ என்னை தனியாக விட்டுவிட்டு இவ்வுலகத்தை விட்டு செல்லவில்லை. நம் காதலுக்கு ஆதாரமாய்தான் குழந்தை வளர்ந்து வருகிறது. குழந்தை எப்போது பிறக்கும் என ஆவலாய் காத்துக்கொண்டு இருக்கிறேன். உன்னை குழந்தையாக கையில் ஏந்த காத்திருக்கிறேன். மற்றொரு உலகில் நான் உனக்காக காத்திருப்பேன், நீ எனக்காக காத்திரு. என்னுடைய மூச்சு இருக்கும் வரை நீயும் என்னுடன் வாழ்வாய்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.