சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து மும்பை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்

தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 6 மாதங்களாகத் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

image

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து மும்பையின் 9தாவது மண்டல டிசிபி அபிஷேக், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால் அவரது உயிரிழப்பு குறித்து உறுதியான தகவலை பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே கூற முடியும். சந்தேகப்படும்படியான எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்

image

கடந்த சில நாள்களுக்கு முன்பு சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் மேலாளராக இருந்த திஷா சலியன் என்ற பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 25. கர்நாடகாவின் உடுப்பி பகுதியைச் சேர்ந்த அவர், மும்பையில் வசித்து வந்தார். திஷாவுக்கு ரோஹன் ராய் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் அவருடன் தான் வசித்து வந்தார். அவர், ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

“தோனி கேப்டனாகவில்லை என்றால் இன்னும் பிரமாதப்படுத்தி இருப்பார்” – கவுதம் காம்பீர் !

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.