சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 1000-ஐ கடந்து பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதுவரை சென்னையில் மொத்தம் 22,149 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 5வது மண்டலமான சென்னை ராயபுரத்தில் அதிகபட்சமாக 3859 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தண்டையார்பேட்டை (மண்டலம் 4) – 2,835, தேனாம்பேட்டை (மண்டலம் 9) – 2518, கோடம்பாக்கம் (மண்டலம் 10) – 2431, திரு.வி.க நகர் (மண்டலம் 6) – 2,167, அண்ணாநகர் (மண்டலம் 8) – 1,974, அடையாறு (மண்டலம் 13) – 1,274, வளசரவாக்கம் (மண்டலம் 11) – 1,054, திருவொற்றியூர் (மண்டலம் 1) – 813, அம்பத்தூர் (மண்டலம் 7) – 807, மாதவரம் (மண்டலம் 3) – 614, பெருங்குடி (மண்டலம் 14) – 415, ஆலந்தூர் (மண்டலம் 12) – 400, சோழிங்கல்லூர் (மண்டலம் 15) – 390, மணலி (மண்டலம் 2) – 328 என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பிற மாவட்டங்களில் 270 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.