இந்திய சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அச்சுறுத்தல் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக்கெட் இன்ஃபோ ஏற்பாடு செய்த கருத்து பரிமாற்றத்தில் கூறிய சேப்பல், குல்தீப் யாதவின் ஸ்பின் ஆஸ்திரேலிய மைதானங்களில் நன்றாக எடுபடுகிறது என தெரிவித்தார். அவரை அணியில் சேர்த்தது ஒரு தைரியமான முடிவு என்றும் கூறியுள்ளார்.

image

இந்திய அணித் தேர்வாளர்களுக்கு சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வது பெரும் தலைவலி எனக் குறிப்பிட்டுள்ள அவர், அஸ்வின் பெரும் சாதனைகளை படைத்துள்ளதாகவும், ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெரிதளவில் எடுபடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

image

ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது திறமைகளையும், பந்துவீச்சையும் முன்னேற்றிக் கொண்டுள்ளதாகவும், தற்போது அவர் ஒரு சவாலான வீரராக உருவெடுத்திருப்பதாகவும் கூறினார்.

கொரோனா பாதிப்பு இல்லாத நாடு : நியூஸிலாந்து அறிவிப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.