சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,486 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,207 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 31,667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 22,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,954 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

image

இந்நிலையில், சென்னை ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரும்பாக்கத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதேபோல், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இன்று மட்டும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.