கடந்த ஜனவரி முதல் தினம் தினம் கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு இன்று சீனாவில் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை இன்று உலக நாடுகளிடையே ஒலித்துக்கொண்டு இருக்கிறது. முதன்முதலாக கொரோனா என்ற தொற்று பரவுவதாகவும், இது வூகான் மாகாணத்தில் ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் ஜனவரி மாதம் சீனா கூறியது. ஜனவரி முதல்
தினம் தினம் கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு இன்று சீனாவில் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகப்பெரிய சாதனை என அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்துத் தெரிவித்துள்ள அவர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் இது மிகப்பெரிய சாதனை எனக் குறிப்பிட்டுள்ளனர்
முதன் முதலில் தொடங்கப்பட்டாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் 83ஆயிரத்திற்குள் மட்டுமே உள்ளது.
உயிரிழப்பு 5ஆயிரத்திற்குள் ஆகும். ஆனால் அதிகபட்சமாக அமெரிக்காவில் 16லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும்,ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. உலக அளவில் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர்
இதற்கிடையே கொரோனா தொடர்பாக அமெரிக்கா சீனா இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. கொரோனா தொடர்பாகச்
சரியான எச்சரிக்கையைச் சீனா கொடுக்கவில்லை என அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால் சரியான நேரத்தில் உலக
சுகாதார நிறுவனத்திற்கும், உலக நாடுகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகச் சீனா கூறி வருகிறது.